இயக்குநர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படம் நடிகர் தனுஷ் உடன் என உறுதியளித்துள்ளார்.
இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் திரைப்படம் அக்.17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
நிவாஸ் கே. பிரசன்னா இசையில் உருவாகியுள்ள அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மாரி செல்வராஜ் பேசியதாவது:
பைசன் படத்துக்குப் பிறகு தனுஷ் சார் படம்தான். ஐசரி கணேஷ் மற்றும் வுண்டர்பார் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். வரலாற்று சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும்.
பைசன் முன்னமே பா. ரஞ்சித்துடன் சொல்லியதால் தற்போது முடித்தேன். தாணு சார், ஐசரி கணேஷ் உடன் படம் இருக்கிறது. ஆனால், முதலில் தனுஷ் படம்தான் நான் ஒப்புக்கொண்டேன் என்பதால் அடுத்து அந்தப் படம்தான் என்றார்.
Summary
Director Mari Selvaraj has confirmed that his next film will be with actor Dhanush.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளையராஜா இசையில்... மாரி செல்வராஜ் படத்தின் பெயர் அறிவிப்பு!

மாரி செல்வராஜ் புதிய பட அப்டேட்!

சமூகநீதி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் அமைச்சரவை! - தவெக அரசுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் சந்திப்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



