காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் 1 கடந்த அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது.
பான் இந்திய வெளியீடான காந்தாரா, இதுவரை ரூ. 803 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, இந்தாண்டின் பெரிய வணிக வெற்றியைப் பெற்ற படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து, வருகின்ற அக். 31 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 169 நிமிடங்களாக உள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், ஆங்கில மொழிப்பெயர்ப்பில் 134 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் காந்தாரா சாப்டர் 1 பெற்றுள்ளது.

Summary
Kantara Chapter 1 to be released in English
இதையும் படிக்க : நடிகை மனோரமா மகன் பூபதி காலமானாா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் காந்தாரா நடிகையின் புதிய திரைப்படம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



