சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

காந்தாரா - 1 ஒரு மாதத்திலேயே ஓடிடியில் வெளியாவது ஏன்?

காந்தாரா - 1 ஓடிடி வெளியீடு குறித்து...

News image

ரிஷப் ஷெட்டி

Updated On :30 அக்டோபர் 2025, 2:26 pm IST

காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் நாளை (அக். 31) ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா - 1 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமான வசூலைச் செய்து வருகிறது. ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ. 800 கோடிக்கும் அதிகமாகவே வணிகம் செய்திருக்கிறது.

இதனால், ரிஷப் ஷெட்டியும் இந்தியளவில் பிரபலமடைந்துள்ளார். மேலும், இப்படம் நிறைய விருதுகளை வெல்லும் என்றும் தெரிகிறது.

இப்படம் நாளை (அக். 31) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, திரையரங்கில் வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கும் காந்தாரா - 1 ஏன் ஒரே மாதத்திலேயே திரைக்கு வருகிறது என்கிற கேள்விகளும் எழுந்தன.

இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே ஃபிலிம்ஸின் பங்குதாரர் சௌலே கவுடா, “காந்தாரா - 1 திரைப்படத்தின் ஓடிடி உரிமம் 3 ஆண்டுகளுக்கு முன்பே விற்கப்பட்டது. அதனால், இப்போதைய வெளியீடு முடிவு அன்றைய நடைமுறைக்கு மாறுபட்டதாகவே இருந்தாலும் சொன்னபடி நடந்துகொள்வது எங்கள் கடமையாகும்.

கரோனாவுக்கு முன் அனைத்து திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியான 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகும். ஆனால், கரோனாவுக்குப் பின் 4 வாரங்களாக மாறின. கூலி போன்ற பெரிய பட்ஜெட் படமும் 4 வாரங்களில் அனைத்து மொழிகளிலும் வெளியானது. அந்தந்த நேரத்தைப் பொறுத்து இது நிகழ்கிறது.

காந்தாரா சாப்டர் - 1 தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில்தான் வெளியாகிறது. 8 வாரங்கள் கழித்தே ஹிந்தியில் வெளியாகும். மேலும், ஓடிடி வெளியீடு திரையரங்க வணிகத்தைப் பாதிக்காது என்றே நினைக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

producer spokes about kantara chapter - 1 movie's early ott release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.