ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

காந்தா படத்தின் புதிய பாடல் வெளியீடு!

“ரேஜ் ஆஃப் காந்தா” எனும் புதிய பாடல் வெளியாகியுள்ளது குறித்து...

News image

ரேஜ் ஆஃப் காந்தா பாடல் வெளியாகியுள்ளது

Updated On :30 அக்டோபர் 2025, 5:52 pm IST

நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படத்தின் ‘ரேஜ் ஆஃப் காந்தா’ எனும் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “காந்தா”. இப்படம், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர்கள் சமுத்திரகனி, பாக்ய ஸ்ரீ போஸ், ரானா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு, ஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின், ‘கண்மணி நீ’ எனும் முதல் பாடல் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

காந்தா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் “ரேஜ் ஆஃப் காந்தா” எனும் புதிய பாடலை, படக்குழுவினர் இன்று (அக். 30) வெளியிட்டுள்ளனர்.

Summary

The song "Rage of Kaantha" from actor Dulquer Salmaan's film Kaantha has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.