சின்னஞ்சிறு கிளியே என்ற தொடரில் நடிகை சுஜிதா நடிக்கவுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த சுஜிதா, இதன்மூலம் மீண்டும் சின்ன திரையில் நடிக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் நடிகை சுஜிதா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நிரோஷா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திற்குப் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கெளரி தொடரில் சிறப்புத் தோற்றத்தில் சுஜிதா நடித்தார். எனினும், அதிலும் தொடர்ச்சியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இதனிடையே தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சின்னஞ்சிறு கிளியே தொடரில் நடிகை சுஜிதா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனது உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் சுஜிதாவை மீண்டும் சின்ன திரையில் காண அவரின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சுஜிதா - இன்ஸ்டாகிராம்
குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போது திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்த சுஜிதா, தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் மூலம் சின்ன திரையில் நுழைந்தார். தொடர்ந்து, கங்கா யமுனா சரஸ்வதி, கணவருக்காக, மருதாணி, பைரவி, உள்ளிட்டத் தொடர்களில் நடித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த சுஜிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக விஜய் டிவி வழங்கிய விருதை இரு முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராகிறார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை?
Summary
Sujitha Dhanush makes a special appearance in the popular Chinnansiru Kiliye
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூன்று முடிச்சு தொடரில் நடிக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்!

இன்று முதல் ’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடர்! இயக்குநர் வி. சேகருக்கு கெளரவம்!

வாகை சூட வா தொடரில் விஜய் பட நாயகி!

’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



