வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கல்யாணி பிரியதர்ஷனால் மீண்டும் வைரலான இளையராஜா பாடல்!

லோகா படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல்...

News image
Updated On :3 செப்டம்பர் 2025, 12:20 pm IST

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல் மீண்டும் வைரலாகியுள்ளது.

மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டோமினிக் அருண் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ கதையாக உருவான இப்படம் வசூலில் அசத்தி வருகிறது. எதிர்பாராத அளவிற்கு லோகாவுக்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்து வருவதால் தமிழகத்திலும் இப்படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வார இறுதிக்குள் இப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஒரு காட்சியில் அழகாக உடையணிந்து நடந்து வரும்போது பின்னணியில் இளையராஜா இசையமைத்த ‘கிளியே, கிளியே’ பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன.

இப்பாடலுடன் கல்யாணியைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக விசிலடித்தனர். தற்போது, யூடியூபில் இந்தக் ’கிளியே, கிளியே’ பாடல் வைரலாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பாடலைப் பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்திருந்த நிலையில், மீண்டும் இணையத்தைக் கலக்கி வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

நடிகர் மம்மூட்டி நடித்த ’ஆ ராத்ரி (அந்த இரவு)’ படத்தில் இளையராஜா இசையமைத்த கிளியே பாடலை பூவாச்சல் காதர் எழுத, ஜானகி பாடியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.