இயக்குநர் ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல கோடி ரூபாயில் அவர் அமைத்த செட் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 1200 கோடி என தகவலகள் தெரிவிக்கின்றன. தகவல் உண்மையானால், இதுவே இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாகும்.
உலகம் முழுவதும் 130 மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் ஹாலிவுட்டுக்கு இணையான வணிகமும் நடைபெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
Summary
reports suggests director ss rajamouli and mahesh babu movie budget is rs.1300 crores
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் ஜீவாவின் தகப்பன் முதல் தோற்ற போஸ்டர்!

கலங்காதே... நடிகர் விஷாலின் மகுடம் 3-வது பாடல்!

நடிகர் சூர்யாவின் 49-வது திரைப்பட இயக்குநர் இவரா?

வாரணாசி: 80 நாள்களில் நிறைவடையவுள்ள படப்பிடிப்பு!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


