சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

வடசென்னை உலகில்.. சிம்பு! எஸ்டிஆர்-49 முன்னோட்ட விடியோ!

இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் முன்னோட்ட விடியோ வெளியானது...

News image

முன்னோட்ட விடியோவில் இருந்து...

Updated On :4 செப்டம்பர் 2025, 6:58 pm IST

நடிகர் சிலம்பரசனின் 49-வது திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இயக்கத்தில் உருவாகும் நடிகர் சிலம்பரசனின் 49 வது திரைப்படத்தின் முன்னோட்ட விடியோவை படக்குழுவினர் இன்று (செப்.4) வெளியிட்டுள்ளனர்.

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 47-வது படமாக உருவாகும், இந்தப் புதிய படத்தின் அடுத்தக்கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது வெளியான விடியோவின் மூலம் சிம்பு நடிக்கும் இந்தப் படம், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷின் கூட்டணியில் உருவான பிரபல வடசென்னை திரைப்படத்தின் உலகில் இணைவது உறுதியாகியுள்ளது.

வடசென்னை படத்தின் தலைப்பின் வடிவில், இந்த விடியோவின் எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதால், அதே யூனிவர்ஸில் ஒரே காலக்கட்டத்தில், இந்தக் கதையும் நடைபெறக்கூடும் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

The preview video of actor Silambarasan's 49th film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.