
காஜல் அகர்வால் விபத்தில் சிக்கினாரா?
காஜல் அகர்வால் விபத்தில் சிக்கியதாக பரவும் செய்தி பற்றி...

காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் விஜய், சூர்யா, கார்த்தியுடன் நடித்து பிரபலமான காஜல் அகர்வால் கடைசியாக இந்தியன் - 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கெளதம் என்பவருடன் திருமணமான பிறகு மும்பையில் வசித்து வரும் காஜல் அகர்வாலுக்கு சரியான பட வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில், காஜல் அகர்வால் கார் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மரணமடைந்துவிட்டதாகவும் இணையத்தில் வேகமாக வதந்தி பரவி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, இணையத்தில் பரவும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்து காஜல் அகர்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”நான் விபத்தில் சிக்கியதாகவும் இறந்துவிட்டதாகவும் ஆதாரமற்ற செய்திகள் பரவி வருவதை நான் அறிவேன். இதனால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
கடவுள் புண்ணியத்தில் நான் நலமாக இருக்கிறேன். உயிருடனும் பாதுகாப்புடனும் இருக்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
எனவே, தவறான செய்திகளை யாரும் நம்பவோ பரப்பவோ வேண்டாம் என தயவுகூர்ந்து கேட்டுக் கொள்கிறேன். வதந்திகளுக்கு பதிலாக நேர்மறையான விஷயங்களையும் உண்மையையும் பரப்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Iâve come across some baseless news claiming I was in an accident (and no longer around!) and honestly, itâs quite amusing because itâs absolutely untrue. ð
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) September 8, 2025
By the grace of god, I want to assure you all that I am perfectly fine, safe, and doing very well â¤ï¸
I kindly requestâ¦
Summary
The statement has been issued following reports that actress Kajal Aggarwal was involved in an accident.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






