இயக்குநர் பிரேம் குமார் நடிகர் ஃபஹத் ஃபாசில் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்றார்.
அடுத்ததாக, நடிகர் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பிரேம் குமார், நடிகர் விக்ரமுடனான திரைப்படத்திற்கான கதையை இன்னும் எழுதி முடிக்கவில்லை என்றும் அடுத்ததாக நடிகர் ஃபஹத் ஃபாசிலை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக உள்ளதாகக் குறிப்பிட்டவர், மென்மையான இயக்குநர் என்கிற பிம்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இக்கதையை இயக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: விஜய் ஆண்டனி - சசி படத்தின் பெயர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.