டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

ஆன் ஆர்டினரி மேன் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2025, 7:27 pm IST

ரவி மோகன் - யோகிபாபு கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அண்மையில், நடிகர் ரவி மோகன் அவருடைய பெயரில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

அதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நடிகர் ரவி மோகன், யோகிபாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி தயாரிக்கிறார். இப்படத்துக்கு ’ஆன் ஆர்டினரி மேன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரவி மோகனின் பிறந்த நாளையொட்டி ’ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The team of Ravi Mohan and Yogi Babu's upcoming film 'An Ordinary Man' has released a preview.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.