பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கும்கி - 2 படத்தின் அறிவிப்பு வெளியானது!

கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கும்கி 2 போஸ்டர்

Published On :

கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

தம்பி ராமையாவின் நகைச்சுவை, டி. இமானின் இசையில் வெளியான பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கும்கி - 2 திரைப்படத்தின் அறிவிப்பை மோஷன் போஸ்டருடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் பாகத்தில் உயிரிழக்கும் கும்கி யானை, மீண்டும் பிறந்துவிட்டேன் என்ற வாசகத்துடன் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகத்தையும் பிரபுசாலமன் இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் அறிமுக விடியோவை பகிர்ந்துள்ள நடிகர் சிம்பு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Summary

The announcement of the film Kumki - 2 has been released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.