பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கூலியில் நடித்தது தவறு... ஆமிர் கான் சொன்னது உண்மையா?

இணையத்தில் பரவும் ஆமிர் கான் செய்தி....

News image

ஆமிர் கான்

Updated On :13 செப்டம்பர் 2025, 4:35 pm IST

நடிகர் ஆமிர் கான் கூறியதாக பரவும் செய்தி போலியானது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆக.14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற கூலி படம் தற்போது அமோசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் உள்பட பலரின் கதாபாத்திரமும் விமர்சனத்திற்கு உள்ளானது. முக்கியமாக, இந்தியாவின் சிறந்த நடிகரான ஆமிர் கானை வீணடித்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் நடிகர் ஆமிர் கான், “சூப்பர் ஸ்டாருக்காக மட்டுமே கூலியில் நடித்தேன். ஆனால், இப்போது வரை என் கதாபாத்திரம் என்னவென்று தெரியவில்லை. ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தது ஏன் எனப் புரிகிறது. இனிமேல், இது மாதிரியான திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். கூலியில் நடித்து பெரிய தவறு செய்துவிட்டேன்.” எனக் கூறியதாக பல நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டன.

சமூக வலைதளங்களிலும் பலர் ஆமிர் கான் சொன்னதாக இவற்றை பரப்பி வந்தனர். ஆனால், ஆமிர் கான் இப்படி எதுவும் சொல்லவில்லை என்றும் இவை அனைத்தும் போலியான செய்தி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆமிர் கான் பேசியதாகச் சொல்லப்படும் கருத்துகள் எந்த நேர்காணல்களிலும் பதிவாகவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

Summary

reports suggests actor aamir khan's viral news were false

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.