தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கூலியில் நடித்தது தவறு... ஆமிர் கான் சொன்னது உண்மையா?

இணையத்தில் பரவும் ஆமிர் கான் செய்தி....

News image

ஆமிர் கான்

Updated On :13 செப்டம்பர் 2025, 4:35 pm IST

நடிகர் ஆமிர் கான் கூறியதாக பரவும் செய்தி போலியானது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆக.14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற கூலி படம் தற்போது அமோசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் உள்பட பலரின் கதாபாத்திரமும் விமர்சனத்திற்கு உள்ளானது. முக்கியமாக, இந்தியாவின் சிறந்த நடிகரான ஆமிர் கானை வீணடித்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் நடிகர் ஆமிர் கான், “சூப்பர் ஸ்டாருக்காக மட்டுமே கூலியில் நடித்தேன். ஆனால், இப்போது வரை என் கதாபாத்திரம் என்னவென்று தெரியவில்லை. ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தது ஏன் எனப் புரிகிறது. இனிமேல், இது மாதிரியான திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். கூலியில் நடித்து பெரிய தவறு செய்துவிட்டேன்.” எனக் கூறியதாக பல நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டன.

சமூக வலைதளங்களிலும் பலர் ஆமிர் கான் சொன்னதாக இவற்றை பரப்பி வந்தனர். ஆனால், ஆமிர் கான் இப்படி எதுவும் சொல்லவில்லை என்றும் இவை அனைத்தும் போலியான செய்தி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆமிர் கான் பேசியதாகச் சொல்லப்படும் கருத்துகள் எந்த நேர்காணல்களிலும் பதிவாகவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

Summary

reports suggests actor aamir khan's viral news were false

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.