காந்தாரா சேப்டர் 1: டப்பிங் பணிகளை முடித்த ருக்மணி வசந்த்!

நடிகை ருக்மணி வசந்த் பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி குறித்து...
Rukmani Vasanth in dubbing, the kantara film's poster (center).
டப்பிங்கில் ருக்மணி வசந்த், படத்தின் போஸ்டர் (நடுவில்). படங்கள்: இன்ஸ்டா / ருக்மணி வசந்த், ஹொம்பாலே ஃபிலிம்ஸ்.
Published on
Updated on
1 min read

நடிகை ருக்மணி வசந்த் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் காந்தாரா சேப்டர் 1 படத்தின் டப்பிங் பணிகளை முடித்ததாகக் கூறியுள்ளார்.

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் 2022-இல் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

காந்தாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெற்ற கதையை மையமாக வைத்து காந்தாரா சேப்டர் 1 படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி நடித்துள்ளார். ஹொம்பாலே ஃபில்ம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் 7 இந்திய மொழிகளில் அக்.2ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை தான் முடித்து விட்டதாக நடிகை ருக்மணி வசந்த் இன்ஸ்டா ஸ்டோரியின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் அவர் கனகவதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Summary

Actress Rukmani Vasanth has announced on her Instagram story that she has completed the dubbing work for the film Kanthara Chapter 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com