2 பாகங்களாக உருவாகும் சிம்பு - வெற்றி மாறன் திரைப்படம்!

எஸ்டிஆர் - 49 குறித்து....
2 பாகங்களாக உருவாகும் சிம்பு - வெற்றி மாறன் திரைப்படம்!
Published on
Updated on
1 min read

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகி வருகிறது.

இதில் நாயகனாக நடிகர் சிலம்பரசனும் முக்கிய கதாபாத்திரங்களில் வடசென்னை திரைப்படத்தில் நடித்தவர்களும் நடிக்கின்றனர்.

அண்மையில், இப்படத்தின் புரோமோ பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. சிம்பு நடந்து வருவது போன்ற காட்சி இப்படம் வடசென்னை திரைப்படத்தை மையப்படுத்தி உருவாகி வருவதை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கான 1.15 மணி நேரக் கதையை எழுதி முடித்ததாகவும் மீதம் 5 எபிசோடுகள் அளவிற்கு கதை உள்ளதாகவும் இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

இதனால், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடசென்னை திரைப்படத்தின் 2 ஆம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த தகவலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

silambarasan and vetri maaran movie could be a 2 Part film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com