நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் மம்மூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, மலையாளத் திரையுலகினர் விருதுக்கான சரியான தேர்வு என மோகன்லாலின் நடிப்பு குறித்து பதிவு செய்கின்றனர்.
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒரு சக நடிகர் என்பதைத் தாண்டி சகோதரராக பல தசாப்தங்கள் சினிமாவை வாழ்வாகவும் மூச்சாகவும் கொண்டிருக்கும் ஒரு உண்மையான கலைஞருக்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் லால். நீங்கள் இந்த மகுடத்திற்கு முற்றிலும் தகுதியானர்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகன்லால் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை செய்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
actor mammooty wishes actor mohanlal for his Dadasaheb Phalke Award
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









