உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

ஹிந்தியில் ரீமேக்காகும் செல்லம்மா தொடர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லம்மா தொடர் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.

News image

செல்லம்மா தொடரில் அன்ஷிதா - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :23 செப்டம்பர் 2025, 6:25 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லம்மா தொடர் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.

நடிகை அன்ஷிதா நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர், ஹிந்தியிலும் ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் 2022 மே முதல் 2024 செப்டம்பர் வரை செல்லம்மா தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் பிக் பாஸ் பிரபலம் அன்ஷிதா நாயகியாக நடித்திருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே தொடரில் அவர் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகர் அர்ணவ் (இவரும் பிக் பாஸ் பிரபலமே) நடித்திருந்தார்.

கணவரை இழந்து பெண் குழந்தையுடன் இருக்கும் பெண்ணின் கதையாக செல்லம்மா தொடர் ஒளிபரப்பானது. பின்னர் அவரின் வாழ்க்கையில் மீண்டுமொரு காதல் தோன்றி, அது சந்திக்கும் சவால்களே தொடரின் மையக்கருவாக உள்ளது.

உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் நடிகர்களின் நடிப்பும் சேர்ந்ததால், இந்தத் தொடர் தமிழில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கேரளாவைச் சேர்ந்த அன்ஷிதாவுக்கு தமிழில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

தற்போது ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படவுள்ள செல்லம்மா தொடரில், நடிகை அஷிகா படுகோனே நாயகியாக நடிக்கவுள்ளார். இவர், மாரி தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Summary

Chellamma serial also being remade in Hindi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.