கரூர் பலி: விஜய் சேதுபதி திரைப்பட நிகழ்வு ரத்து!

கரூர் பலி: விஜய் சேதுபதி திரைப்பட நிகழ்வு ரத்து!

விஜய் சேதுபதி படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு...
Published on

கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் சேதுபதியின் திரைப்பட நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தலைவன் தலைவி வெற்றியைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத்துடன் இணைந்துள்ளார்.

பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ள இப்படம் பெரிய செலவில் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. புரியின் தயாரிப்பு நிறுவனமே இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தின் பெயர் டீசர் வெளியீட்டு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற இருந்தது. ஆனால், கரூரில் நெரிசல்களால் 40 பேர் இறந்ததால் அந்நிகழ்வை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்ததுள்ளது.

Summary

actor vijay sethupathi's new movie function canceled for karur stampede

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com