பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

20களுக்கும் 30களுக்கும் வித்தியாசம் என்ன? சமந்தா எழுதிய கவிதை!

பெண்ணின் வாழ்க்கையில், இருபதுகளில் இருந்து முப்பது என்பது எந்தவகையில் மாறுபட்டதாக உள்ளது என்பதை கவிதையாக சமந்தா எழுதியுள்ளார்.

சமந்தா - படம் - முகநூல் / சமந்தா ரூத் பிரபு

Published On :

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இருபதுகளில் இருந்து முப்பது என்பது எந்தவகையில் மாறுபட்டதாக உள்ளது என்பதை கவிதையாக சமந்தா எழுதியுள்ளார்.

இருபதுகளின் வேகத்தில் தொலைத்த காலம், இன்பம், குடும்ப நேரம் என பலவற்றையும் விட முப்பதுகளில் கிடைக்கும் உண்மையான அன்பும், தன்னை உணர்ந்தலும் மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பனைக் கலைஞர் அவ்னி ராம்பியா உடனான நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு தனக்கு சில சிந்தனைகள் உதித்ததாகவும், அதனை ஆங்கிலத்தில் கவிதையாகப் பதிவு செய்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது விடியோவைப் பதிவிட்டு அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

மலையிறக்கத்தை 30களுக்குப் பிறகுதான் இந்த உலகம் சொல்லித்தருகிறது.

உங்கள் பளபளப்பு மங்கும்,

உங்கள் அழகு சரிந்து நழுவும்

காலம் ஓடுவதைப் போலவே

அழகான முகம், கச்சிதமான உடல், பகட்டு வாழ்க்கை

இவை எல்லாவற்றுக்காகவும்

இருபதுகளில் விரைய வேண்டும்

எனது இருபதுகள் மிகவும் பரபரப்பானது, ஓய்வறியாதது

அவசரகதியுடனேயே அவற்றை அணுகினேன்

போதுமான அளவு அழகாக இருப்பதற்கும் அவசரம்

போதுமான அளவு உணர்வதற்கு அவசரம்

நான் நானாக இருப்பதற்கும் அவசரம்

ஆனால், இந்த அவசரகதியில்

எனக்குள் நான் இழந்தவற்றை யாரும் பார்க்கவில்லை...

நான் பூரணமாக இருக்கிறேன் என்று யாரும் சொல்லவில்லை

ஒருவர் கூட சொல்லவில்லை.

இந்த அன்பு... உண்மையான அன்பு...

என்னை வேறு நபருக்காக மாற்றிக்கொள்ளாமல்

என்னை நான் அறிந்தது போலவே அதைக் கண்டறிவேன்.

முப்பதுகளுக்கு வந்தால்....

ஏதோவொன்று மிருதுவாகியுள்ளது

ஏதோவொன்று திறந்தவெளியாகியிருக்கிறது

என் தவறுகளின் கனத்தை

என்னைச் சுற்றியே இழுத்து வந்ததை நிறுத்திவிட்டேன்.

அதற்குள் நான் பொருந்தியிருப்பதை நிறுத்திவிட்டேன்.

உலகத்திற்கு காட்டும் வாழ்க்கை

எனக்குள் நான் வாழும் வாழ்க்கை என

இரு வாழ்க்கை வாழ்வதை நிறுத்திவிட்டேன்...

இப்போதெல்லாம்,

பொது இடங்களில் இருக்கும் நான்.

யாரும் கவனிக்காதபோது இருக்கும் நானாகவே இருக்கிறேன்.

என் உணர்வுகளில்

மிகவும் உயிர்ப்புடன் இருந்தது அப்போதுதான்...

அனைத்து பெண்களுக்கும் பொருந்தக்கூடியது இது.

அவளுடைய முழுமையை விரும்புகிறேன்.

அவளிடமிருக்கும் ஒருவித அமைதியை விரும்புகிறேன்.

அவள் ஓடுவதை நிறுத்தும்போதுதான்

அவளுக்குள் எல்லாம் இருப்பதை அவள் உணர்கிறாள்.

ஏனெனில்,

எந்தவித வருத்தமும்,

எந்தவித வேஷமும் இன்றி

நீங்கள் நீங்களாக இருக்கும்போது,

நீங்கள் மட்டும் விடுதலை பெறவில்லை

இந்த உலகமும் விடுதலையாகிறது

என ஆங்கிலத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார்.

Summary

Actress samantha wrote poem that goes viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.