இயக்குநர் சேரன் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. தேசிய, மாநில கட்சிகள் அனைத்தும் களத்தில் தங்களின் திட்டங்களையும், வாக்குறுதிகளையும் கூறி மக்களிடம் ஓட்டுச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அதேநேரம், நடிகரும் தவெக தலைவருமான விஜய் தன் முதல் தேர்தலைச் சந்திக்கிறார். பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவும் இருப்பதால் எத்தனை சதவீதம் வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பரப்புரைக்காக விஜய்யைப் போன்று வேடமிட்ட டூப் ஒருவரை வைத்து கொளத்தூர் தவெக வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்ட காணொலி இணையத்தில் வைரலானது.
இதனைக் கண்ட இயக்குநரும் நடிகருமான சேரன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தல். இந்த பரப்புரை நிலை சரிதானா? இந்நேரம் அந்த தலைவர் அனைத்து தொகுதிகளையும் பம்பரமாக சுற்றியிருக்க வேண்டாமா? அதை விடுத்து திருவிழாவில் போட்டோ எடுக்க நடிகர்கள் கட் அவுட் வைத்திருப்பது போல் விஜய்யின் டூப் வேனில் வருவது எவ்வளவு பெரிய அவமானம் அந்த தலைமைக்கு. நாளை சட்டசபைக்குள் இப்படி எத்தனை பேர் அமர போகிறார்கள் தினமும்... நான்கு தேர்தல்களை சந்தித்து தொடர் தோல்வியை சந்தித்த போதும் தளராமல் ஒரு மனிதன் தன் கொள்கைக்காக கட்சிக்காக மக்கள் மாறுவார்கள் என நம்பிக்கை வைத்து, கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் பிரசாரம் செய்கிறார். அந்த தலைவன் எங்கே? முதல் தேர்தலிலேயே தனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் தலைமை எங்கே?
சிந்தியுங்கள் மக்களே... நீங்கள், யார் வேண்டுமா வேண்டாமா எனக் கேட்ட முதல்வர் ஸ்டாலின் இந்த வயதில் இறங்கி நடந்து பிரசாரம் செய்கிறார். ஆனால், நீங்கள் ஒரு மணி நேரம்தான் அனுமதி என காரணம் சொல்லி பிரசாரத்தை ரத்து செய்கிறீர்கள். இப்போ சொல்லுங்க மக்களே.. நிஜப்போட்டி திமுக Vs நாதக தானே...? எனக் கூறியுள்ளார்.
இதனைக் கண்ட விஜய் ரசிகர்கள் பலரும் சேரனைத் தாக்கி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Summary
actor, director cheran has questioning on tvk vijay's election campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக பதிலடி

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!
பெண்களைத் துரத்தும் தவெக நிர்வாகிகள்! சிங்கப்பெண் பாதுகாப்புப் படை தூங்குகிறதா? நயினார் நாகேந்திரன்

தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை! மாணிக்கம் தாகூர்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



