சுந்தரி தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஸ்ரீகோபிகா தான் கருவுற்று இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீகோபிகா.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அன்பே வா தொடரில் டெல்டா டேவிஸ் விலகிய பிறகு, கண்மணி பாத்திரத்தில் ஸ்ரீகோபிகா நாயகியாக நடித்திருந்தார்.
இவருக்கு வருண் தேவ் என்பவருடன் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி குருவாயூரில் உற்றார் உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே, நடிகை ஸ்ரீகோபிகா தான் கருவுற்று இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் பகிர்ந்து இருந்தார்.

ஸ்ரீகோபிகா
இந்த நிலையில் வருண் தேவ் - ஸ்ரீகோபிகா தம்பதியினருக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வளைக்காப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ஸ்ரீகோபிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சின்ன திரை பிரபலங்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
Summary
Sundari serial fame Sreegopika announced that she is pregnant.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1000 நாள்களைக் கடந்த சிறகடிக்க ஆசை தொடர்!

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

கெளரி தொடரில் ரோஜா தொடர் நடிகை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




