நடிகை மமிதா பைஜூ தன் பாடியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
வரதன், விக்ருதி, சூப்பர் சரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. மலையாளியான இவருக்கு தென்னிந்தியளவில் பெரும் புகழைப் பெற்றுத்தந்த திரைப்படம் பிரேமலு. இப்படத்தின் நாயகியாக நடித்து அசத்தியவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.
தமிழிலும் பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது, நடிகர் விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஜன நாயகன் இசை வெளியீட்டின்போது, மேடையில் நடனமாடியதுடன், அழகிய தமிழ் மகனில் இடம்பெற்ற ‘எல்லா புகழும்...’ பாடலின் சில வரிகளையும் பாடினார்.
ஆனால், மமிதாவின் குரல் பாடலுக்கான தரத்தில் இல்லாததால் அவரை ரசிகர்கள் கிண்டலடித்து, விடியோக்களாக வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், மமிதாவிடம் இப்பாடல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இதையெல்லாம் ஜாலியாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.