நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

அதெல்லாம் ஒரு ஜாலிதான்... மமிதா பைஜூ!

பாடல் பாடியது குறித்து மமிதா பைஜூ...

News image

மமிதா பைஜூ

Updated On :8 பிப்ரவரி 2026, 5:51 pm IST

நடிகை மமிதா பைஜூ தான் பாடிய பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

வரதன், விக்ருதி, சூப்பர் சரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. மலையாளியான இவருக்கு தென்னிந்தியளவில் பெரும் புகழைப் பெற்றுத்தந்த திரைப்படம் பிரேமலு. இப்படத்தின் நாயகியாக நடித்து அசத்தியவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

தமிழிலும் பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது, நடிகர் விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஜன நாயகன் இசை வெளியீட்டின்போது, மேடையில் நடனமாடியதுடன், அழகிய தமிழ் மகனில் இடம்பெற்ற ‘எல்லா புகழும்...’ பாடலின் சில வரிகளையும் பாடினார்.

ஆனால், மமிதாவின் குரல் பாடலுக்கான தரத்தில் இல்லாததால் அவரை ரசிகர்கள் கிண்டலடித்து, விடியோக்களாக வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், மமிதாவிடம் இப்பாடல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இதையெல்லாம் ஜாலியாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்” எனக் கூறியுள்ளார்.

Summary

mamitha baiju answered on her singing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.