நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல பகுதிகளில் நடைபெற்று வருவதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கலாம் எனத் தெரிகிறது.
மேலும், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கும் ரஜினி தயாராக உள்ளார். நெல்சன் இயக்கும் இப்படத்திற்கான புரோமோ பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜெயிலர் - 2, ரஜினி - 173, கமல் உடனான திரைப்படம் என அடுத்தடுத்து ஓய்வில்லாமல் ரஜினி நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.