நடிகை மிருணாள் தாக்குர் தன் திருமணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
நடிகை மிருணாள் தாக்குர் பிரபலமான நடிகையென்பதால் எப்போதும் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன.
அண்மை காலமாக, நடிகர் தனுஷும் மிருணாளும் காதலிப்பதாகவும் இருவரும் பிப். 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்வதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவிக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு சந்தேகங்களையும் கிளப்பியது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய மிருணாள் தாக்குரிடம் அவரின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மிருணாள், “எனக்கு பிப். 14 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன. அதை நானே ஒப்புக்கொண்டதாகவும் கூறுகின்றனர். உண்மையில், பிப். 14 அன்று பலருக்கும் ஏப். 1 ஆக இருக்கும். இதனை யார் ஆரம்பித்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தனுஷ் - மிருணாள் திருமண தகவல் முற்றிலும் வதந்தி என்றே தெரிய வந்துள்ளது.
Summary
actor mrunal thakur spokes about marriage rumours behind her with dhanush
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








