மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை: ராதிகா

திரை எழுத்தாளர்கள் குறித்து ராதிகா பேசியுள்ளார்...

News image
ராதிகா
Updated On :13 பிப்ரவரி 2026, 7:57 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகத் திறமையான நடிகர், தயாரிப்பாளர் எனப் பெயரெடுத்தவர் ராதிகா சரத்குமார். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் திரை வாழ்வை ஆரம்பித்த ராதிகா 48 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறார்.

பல கதாநாயகர்களுக்கு நாயகியாகவும் அம்மாவாகவும் நடித்தவர் தற்போது தாய் கிழவி என்கிற திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப். 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ராதிகா, “தமிழ் சினிமாவில் திரை எழுத்தில் பெரிய தொய்வு இருக்கிறது. மலையாளத்தில் திரை எழுத்து வேறு பரிணாமத்தை அடைந்துவிட்டது. மலையாளத்தில் வெளியான எகோ (EKO) திரைப்படத்தின் கதையைச் சொன்னால் தமிழில் யாராவது நடிப்பார்களா? இவர்களுக்கு (தமிழ் நாயகர்கள்) பறந்து அடிக்க வேண்டும்.

Story image

நடிகர் ரஜினிகாந்த், தனக்கு வித்தியாசமான கதைகளில் நடிக்க அதிக ஆர்வம் இருப்பதாக என்னிடம் கூறினார். ஆனால், அவரால் நடிக்க முடியாத சூழலே இருக்கிறது. தமிழ் சினிமாவில் நல்ல வலுவான எழுத்து இல்லாததற்கு காரணம், இங்கு எழுத்தாளர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றே நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.