நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகத் திறமையான நடிகர், தயாரிப்பாளர் எனப் பெயரெடுத்தவர் ராதிகா சரத்குமார். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் திரை வாழ்வை ஆரம்பித்த ராதிகா 48 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறார்.
பல கதாநாயகர்களுக்கு நாயகியாகவும் அம்மாவாகவும் நடித்தவர் தற்போது தாய் கிழவி என்கிற திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப். 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ராதிகா, “தமிழ் சினிமாவில் திரை எழுத்தில் பெரிய தொய்வு இருக்கிறது. மலையாளத்தில் திரை எழுத்து வேறு பரிணாமத்தை அடைந்துவிட்டது. மலையாளத்தில் வெளியான எகோ (EKO) திரைப்படத்தின் கதையைச் சொன்னால் தமிழில் யாராவது நடிப்பார்களா? இவர்களுக்கு (தமிழ் நாயகர்கள்) பறந்து அடிக்க வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த், தனக்கு வித்தியாசமான கதைகளில் நடிக்க அதிக ஆர்வம் இருப்பதாக என்னிடம் கூறினார். ஆனால், அவரால் நடிக்க முடியாத சூழலே இருக்கிறது. தமிழ் சினிமாவில் நல்ல வலுவான எழுத்து இல்லாததற்கு காரணம், இங்கு எழுத்தாளர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றே நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.