மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பின்னணி குரலுக்காக ஒரே மேடையில் விருது பெற்ற தாய் - மகள்!

சின்ன திரையில் பின்னணி குரலுக்காக தாயும் மகளும் ஒரே மேடையில் விருது பெற்றுள்ளனர்.

News image
விருது பெறும் லக்‌ஷனா, லக்‌ஷனாவின் தாயார்- படம் - இன்ஸ்டாகிராம்
Updated On :16 பிப்ரவரி 2026, 12:11 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சின்ன திரையில் பின்னணி குரலுக்காக தாயும் மகளும் ஒரே மேடையில் விருது பெற்றுள்ளனர். பின்னணி குரல் வளக் கலைஞர் லக்‌ஷனா, தனது தாயுடன் மாநில அரசு விருதைப் பெற்றுள்ளார்.

40 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிவரும் நிலையில், தனது தாய்க்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அதனை நெகிழ்ச்சியுடன் லக்‌ஷனா பகிர்ந்துள்ளார்

சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களின் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் கலைஞர்கள் தங்கள் குரல் மூலம் உயிர்கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் சுந்தரி உள்ளிட்ட பல தொடர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் லக்‌ஷனா.

அந்தத் தொடரில் நடிகை கேப்ரியல்லாவுக்கு பின்னணி குரல் கொடுத்ததற்காக 2022-ல் சின்ன திரை விருது பெற்றார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்ற வித்யா நம்பர் ஒன் என்ற தொடரிலும் நாயகி தேஜஸ்வி கெளடாவுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய லக்‌ஷனாவுக்கு சிறந்த பின்னணி குரலுக்கான தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.

2014 முதல் 2022 வரை 9 ஆண்டுகளுக்கான சின்ன திரை விருதுகள், 2015-2022 வரை 6 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் மாணவா் விருதுகள், கடந்த 13 ஆம் தேதி வழங்கப்பட்டன.

இதில் லக்‌ஷனாவுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் விருது வழங்கினார். இதேபோன்று லக்‌ஷனாவின் தயாருக்கும் சிறந்த பின்னணி குரலுக்கான விருது வழங்கப்பட்டது.

இதன்மூலம் தாயும் மகளும் சிறந்த பின்னணி குரலுக்காக ஒரே மேடையில் விருது பெற்றுள்ளனர். இதனை நெகிழ்ச்சியுடன் லக்‌ஷனா பகிர்ந்துள்ளார். 40 ஆண்டுகள் தொடர்ந்து தனது தாய் உழைத்து வந்த நிலையில், தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.