நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்க திட்டமிட்டிருந்த திரைப்படத்திற்காக பிரபல தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் தனுஷ் பா. பாண்டி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்கி, நடிக்கத் திட்டமிட்டிருந்த திரைப்படம் நான் ருத்ரன். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.
இதற்காக நடிகர்கள் தனுஷ், நாகர்ஜூனா, எஸ்ஜே சூர்யா ஆகியோருக்கு முன்பணம் கொடுத்து, தயாரிப்பு பணிகளுக்கான செலவுகளையும் அந்நிறுவனம் செய்ததாகத் தெரிகிறது.
ஆனால், திட்டமிட்ட கால்ஷீட்டை கொடுக்கமால் தனுஷ் இழுத்தடித்து வேறுவேறு திரைப்படங்களில் நடிக்கச் சென்றதால், நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனால் உடனடியாக தனுஷ் ரூ. 20 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்ப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.
தனுஷ் தரப்பிலிருந்து நீதிமன்றம் செல்வார்களா இல்லை மீண்டும் இப்படத்திற்காக கால்ஷீட் கொடுத்து இப்படத்தில் கவனம் செலுத்துவாரா? உடனடியாக பதில் தெரிய வேண்டுமென காத்திருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

