பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

வரவேற்பைப் பெற்ற காதலர் நாள் மறுவெளியீட்டுத் திரைப்படங்கள்!

மறுவெளியீட்டுத் திரைப்படங்களுக்கு வரவேற்பு...

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 1:53 pm IST

காதலர் நாளை முன்னிட்டு வெளியான மறுவெளியீட்டுத் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளன.

காதலர் நாளை முன்னிட்டு நடிகர் மாதவனின் மின்னலே, நடிகர் சூர்யாவின் மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் பிப். 13 அன்றும் குணால் நடித்த காதலர் தினம் திரைப்படம் பிப். 14 ஆம் தேதியும் மறுவெளியீடாகின.

மேலும், நடிகர் டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா திரைப்படமும் பிப். 13 அன்று வெளியானது. ஆனால், போதுமான திரைகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், காதலர் நாளன்று திரைக்கு வந்த இத்திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததுடன் இன்றைய இளம் வயதினரும் ரசித்து பார்த்ததாகப் பதிவிட்டு வருகின்றனர்.

முக்கியமாக, மௌனம் பேசியதே மற்றும் காதலர் தினம் திரைப்படங்களைத் திரையரங்கில் பார்த்தவர்கள் ரீல்ஸாக வெளியிட்டு தங்களின் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த இரண்டு திரைப்படங்களின் பாடல்களுக்கும் ரசிகர்கள் நடனமாடிய உற்சாகமடைந்த விடியோக்களும் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.