பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

அசாம் பெண் இயக்குநர் ரிமா தாஸ் இயக்கிய படத்துக்கு விருது கிடைத்தது குறித்து...

News image

படத்தின் போஸ்டர், விருது வென்ற படக்குழுவினர். - படங்கள்: இன்ஸ்டா / ரிமா தாஸ்.

Updated On :22 பிப்ரவரி 2026, 2:40 pm IST

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்குநர் ரிமா தாஸ் இயக்கிய படத்துக்கு, ’கிரிஸ்டல் பியர் ஸ்பெஷல் மென்ஷன் விருது’ கிடைத்துள்ளது.

பெர்லின் திரைப்பட விழாவில் ’நாட் எ ஹீரோ’ என்ற படத்திற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவுக்கு ரிமா தாஸ் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார்.

அசாமைச் சேர்ந்த இயக்குநர் ரிமா தாஸ் (44 வயது) முதன்முதலாக வில்லேஜ் ராக்ஸ்டார் என்ற படத்தின் மூலமாக தேசிய விருது பெற்று பிரபலமானார்.

அடுத்து இவர் இயக்கிய ’புல்புல் கேன் சிங்’, ’வில்லேஜ் ராக்ஸ்டார் 2 ’ ஆகிய படங்கள் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்தன.

தற்போது, ’நாட் எ ஹீரோ’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை அவரே தயாரித்து இயக்கியுள்ளார்.

இளம் தலைமுறைகளைப் பற்றின இந்தப் படத்திற்கு பெர்லின் திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தொழில்முறை நடிகர் நடிகைகள் அல்லாத தனது சொந்த ஊர் மக்களை வைத்தே எடுக்கப்படும் ரிமா தாஸ் படங்களுக்கென்று சினிமா துறையில் வரவேற்பு இருந்து வருகிறது.

Rima Das' 'Not a Hero' gets honoured at Berlin International Film Festival

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.