ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

அசாம் பெண் இயக்குநர் ரிமா தாஸ் இயக்கிய படத்துக்கு விருது கிடைத்தது குறித்து...

The film's poster and award-winning crew.

படத்தின் போஸ்டர், விருது வென்ற படக்குழுவினர். - படங்கள்: இன்ஸ்டா / ரிமா தாஸ்.

Published On :

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்குநர் ரிமா தாஸ் இயக்கிய படத்துக்கு, ’கிரிஸ்டல் பியர் ஸ்பெஷல் மென்ஷன் விருது’ கிடைத்துள்ளது.

பெர்லின் திரைப்பட விழாவில் ’நாட் எ ஹீரோ’ என்ற படத்திற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவுக்கு ரிமா தாஸ் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார்.

அசாமைச் சேர்ந்த இயக்குநர் ரிமா தாஸ் (44 வயது) முதன்முதலாக வில்லேஜ் ராக்ஸ்டார் என்ற படத்தின் மூலமாக தேசிய விருது பெற்று பிரபலமானார்.

அடுத்து இவர் இயக்கிய ’புல்புல் கேன் சிங்’, ’வில்லேஜ் ராக்ஸ்டார் 2 ’ ஆகிய படங்கள் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்தன.

தற்போது, ’நாட் எ ஹீரோ’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை அவரே தயாரித்து இயக்கியுள்ளார்.

இளம் தலைமுறைகளைப் பற்றின இந்தப் படத்திற்கு பெர்லின் திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தொழில்முறை நடிகர் நடிகைகள் அல்லாத தனது சொந்த ஊர் மக்களை வைத்தே எடுக்கப்படும் ரிமா தாஸ் படங்களுக்கென்று சினிமா துறையில் வரவேற்பு இருந்து வருகிறது.

Rima Das' 'Not a Hero' gets honoured at Berlin International Film Festival

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.