

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்குநர் ரிமா தாஸ் இயக்கிய படத்துக்கு, ’கிரிஸ்டல் பியர் ஸ்பெஷல் மென்ஷன் விருது’ கிடைத்துள்ளது.
பெர்லின் திரைப்பட விழாவில் ’நாட் எ ஹீரோ’ என்ற படத்திற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவுக்கு ரிமா தாஸ் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார்.
அசாமைச் சேர்ந்த இயக்குநர் ரிமா தாஸ் (44 வயது) முதன்முதலாக வில்லேஜ் ராக்ஸ்டார் என்ற படத்தின் மூலமாக தேசிய விருது பெற்று பிரபலமானார்.
அடுத்து இவர் இயக்கிய ’புல்புல் கேன் சிங்’, ’வில்லேஜ் ராக்ஸ்டார் 2 ’ ஆகிய படங்கள் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்தன.
தற்போது, ’நாட் எ ஹீரோ’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை அவரே தயாரித்து இயக்கியுள்ளார்.
இளம் தலைமுறைகளைப் பற்றின இந்தப் படத்திற்கு பெர்லின் திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தொழில்முறை நடிகர் நடிகைகள் அல்லாத தனது சொந்த ஊர் மக்களை வைத்தே எடுக்கப்படும் ரிமா தாஸ் படங்களுக்கென்று சினிமா துறையில் வரவேற்பு இருந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.