பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

அரிஜித் சிங்குடன் ஆமீர் கான்...

அரிஜித் சிங், ஆமீர் கான்

Published On :

பிரபல பாடகர், இசையமைப்பாளர் அரிஜித் சிங்கை நேரில சந்தித்து பாட வைத்துள்ளார் ஆமீர் கான்.

இந்தியளவில் மிகப்பிரபலமான பாடகர்களில் ஒருவர் அரிஜித் சிங். இசையமைப்பாளராகவும் பல திரைப்படங்களுக்கு சிறந்த இசையைக் கொடுத்துள்ளார்.

தமிழில், நான் உன் அழகினிலே, அடடா என்ன ஆழகு உள்ளிட்ட பாடல்களைப் பாடி வரவேற்பைப் பெற்றார். பாலிவுட்டில் பல பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் அரிஜித் சிங் இல்லாமல் நடைபெறுவது இல்லை.

இப்படியான அரிஜித் சிங், சில மாதங்களுக்கு முன் திரைப்படங்களில் பின்னணி பாடல்களைப் பாடப்போவதில்லை என அறிவித்தது ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேநேரம், திரைப்படங்களுக்கு இசையமைப்பேன் எனத் தெரிவித்திருந்தார். இருந்தும், பாடகர் அரிஜித் சிங்கை நேசிப்பதாக பலரும் உருக்கமாக பதிவிட்டனர்.

இந்த நிலையில், நடிகர் ஆமீர் கான் தன் தயாரிப்பில் உருவாகும் ’ஏக் தின்’ என்கிற திரைப்படத்தின் அறிமுக பாடலைப் பாட, மும்பையிலிருந்து மேற்கு வங்கம் சென்று அங்கு சொந்த கிராமத்திலிருந்த அரிஜித் சிங்கைச் சந்தித்தார். சந்திப்பின்போது, தொடர்ந்து பாடுங்கள் என கோரிக்கை வைத்ததுடன் தன் படத்திற்காக பாட வைத்துள்ளார். இவர்களின் விடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.