நடிகை ராதிகா சரத்குமார் தன் தந்தை எம். ஆர். ராதா குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான தாய் கிழவி திரைப்படம் பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகை ராதிகா சரத்குமார் நடித்த இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.
இதன் அறிமுக விழா சென்னையில் நேற்று (பிப்.23) நடைபெற்றது. இதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சரத்குமார், சூரி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய நடிகை ராதிகா, “நான் சினிமாவிற்குள் நுழைந்தபோது என் தந்தையான எம். ஆர். ராதாவின் பெயரைச் சொல்லக்கூடாது என என்னை அவமானப்படுத்தியவர்கள் அதிகம். நான் என் அம்மாவிடம் அப்பா பெயரை என்னுடன் இணைக்க வேண்டாம் எனக் கூறினேன்.
இப்போது, தாய் கிழவி திரைப்படத்தில் பெண் எம். ஆர். ராதாவாகவே நடித்திருக்கிறேன். என்னை யாரென்று காட்டிவிட்டேன். பெருமையாகவும் தெனாவட்டாகவும் சொல்கிறேன், நான் எம். ஆர். ராதாவின் மகள் என இன்று நிரூபித்திருக்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
actor radhika sarath kumar about m.r.radha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் தாயாரின் நினைவிடம்தான் எனக்குப் பிடித்த இடம்: ஏ. ஆர். ரஹ்மான்

வேட்டுவம் என் மிகச்சிறந்த நடிப்பாக இருக்கும்: சோபிதா துலிபாலா

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகும் ராதிகா சரத்குமார்!

என்னவொரு பிறந்த நாள் பரிசு! த்ரிஷாவை வாழ்த்திய ராதிகா!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



