உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

எம். ஆர். ராதா குறித்து ராதிகா...

ராதிகா சரத்குமார்

Published On :

நடிகை ராதிகா சரத்குமார் தன் தந்தை எம். ஆர். ராதா குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான தாய் கிழவி திரைப்படம் பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகை ராதிகா சரத்குமார் நடித்த இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.

இதன் அறிமுக விழா சென்னையில் நேற்று (பிப்.23) நடைபெற்றது. இதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சரத்குமார், சூரி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகை ராதிகா, “நான் சினிமாவிற்குள் நுழைந்தபோது என் தந்தையான எம். ஆர். ராதாவின் பெயரைச் சொல்லக்கூடாது என என்னை அவமானப்படுத்தியவர்கள் அதிகம். நான் என் அம்மாவிடம் அப்பா பெயரை என்னுடன் இணைக்க வேண்டாம் எனக் கூறினேன்.

இப்போது, தாய் கிழவி திரைப்படத்தில் பெண் எம். ஆர். ராதாவாகவே நடித்திருக்கிறேன். என்னை யாரென்று காட்டிவிட்டேன். பெருமையாகவும் தெனாவட்டாகவும் சொல்கிறேன், நான் எம். ஆர். ராதாவின் மகள் என இன்று நிரூபித்திருக்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

actor radhika sarath kumar about m.r.radha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.