நடிகை ராதிகா சரத்குமார் தன் தந்தை எம். ஆர். ராதா குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான தாய் கிழவி திரைப்படம் பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகை ராதிகா சரத்குமார் நடித்த இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.
இதன் அறிமுக விழா சென்னையில் நேற்று (பிப்.23) நடைபெற்றது. இதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சரத்குமார், சூரி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய நடிகை ராதிகா, “நான் சினிமாவிற்குள் நுழைந்தபோது என் தந்தையான எம். ஆர். ராதாவின் பெயரைச் சொல்லக்கூடாது என என்னை அவமானப்படுத்தியவர்கள் அதிகம். நான் என் அம்மாவிடம் அப்பா பெயரை என்னுடன் இணைக்க வேண்டாம் எனக் கூறினேன்.
இப்போது, தாய் கிழவி திரைப்படத்தில் பெண் எம். ஆர். ராதாவாகவே நடித்திருக்கிறேன். என்னை யாரென்று காட்டிவிட்டேன். பெருமையாகவும் தெனாவட்டாகவும் சொல்கிறேன், நான் எம். ஆர். ராதாவின் மகள் என இன்று நிரூபித்திருக்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
actor radhika sarath kumar about m.r.radha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்: அனுபமா பரமேஸ்வரன்

இதற்காக என் அம்மா என்னை ப்ளாக் செய்தார்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

காதலைவிட, அட்வெஞ்சரில்தான் ஆர்வம்: இயக்குநர் ஜேசன் சஞ்சய்

இதயம் முரளி என் வாழ்க்கையில் நெருக்கமான திரைப்படம்: ப்ரீத்தி முகுந்தன்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



