நடிகை ராதிகா சரத்குமார் தன் தந்தை எம். ஆர். ராதா குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான தாய் கிழவி திரைப்படம் பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகை ராதிகா சரத்குமார் நடித்த இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.
இதன் அறிமுக விழா சென்னையில் நேற்று (பிப்.23) நடைபெற்றது. இதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சரத்குமார், சூரி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய நடிகை ராதிகா, “நான் சினிமாவிற்குள் நுழைந்தபோது என் தந்தையான எம். ஆர். ராதாவின் பெயரைச் சொல்லக்கூடாது என என்னை அவமானப்படுத்தியவர்கள் அதிகம். நான் என் அம்மாவிடம் அப்பா பெயரை என்னுடன் இணைக்க வேண்டாம் எனக் கூறினேன்.
இப்போது, தாய் கிழவி திரைப்படத்தில் பெண் எம். ஆர். ராதாவாகவே நடித்திருக்கிறேன். என்னை யாரென்று காட்டிவிட்டேன். பெருமையாகவும் தெனாவட்டாகவும் சொல்கிறேன், நான் எம். ஆர். ராதாவின் மகள் என இன்று நிரூபித்திருக்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
actor radhika sarath kumar about m.r.radha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!

சினிமாவில் 49 ஆண்டுகள்! ராதிகாவை வாழ்த்திய ஹாய் படக்குழு!
அப்போதெல்லாம் கண்ணீர் விட்டிருக்கிறேன்: ஸ்ரீலீலா
படப்பிடிப்பில் பாக்யராஜைத் திட்டிய ராதிகா! ஏன்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


