ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

புத்தாண்டிலும் அப்டேட் இல்லையா? வருந்தும் சூர்யா ரசிகர்கள்!

சூர்யாவின் கருப்பு...

News image

நடிகர் சூர்யா

Updated On :1 ஜனவரி 2026, 3:27 pm IST

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாவதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என்கிற வரிசையே நீண்ட காலமாக இருக்கிறது. இதில், உச்ச நட்சத்திரம் என்கிற அடையாளத்துடன் விஜய் ஜன நாயகன் திரைப்படத்துடன் சினிமாவைவிட்டு விலகுகிறார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பதுடன் கார் பந்தயத்திலும் முழு கவனம் செலுத்தி வருவதால், சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என்கிற எந்தக் காட்டாயத்திலும் அவர் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த இருவரை ஒப்பிட, நடிகர் சூர்யா தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என இந்தாண்டு மூன்று வெளியீடுகளைக் காண உள்ளார்.

இறுதியாக, சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா, ரெட்ரோ ஆகிய திரைப்படங்கள் சரியான வணிகத்தையும் வரவேற்பையும் பெறாததால் தற்போது நடித்து முடித்துள்ள கருப்பு திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Story image

ஆனால், இன்னும் இப்படத்திற்கான ஓடிடி பேச்சுவார்த்தைகள் முடிவடையாததால் திரையரங்க வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்படவில்லை.

அதனால், படத்தின் புதிய பாடல்களோ, மற்ற அறிவிப்புகளோ வரமால் இருக்கிறது. தற்போது, புத்தாண்டு போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ளது. முழுப்படமும் முடிந்தும் சூர்யாவுக்கே வெளியீடு பிரச்னை வந்திருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.