

டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்டி காலனி 2 திரைப்படம், வணிக ரீதியாக ரூ. 80 கோடி வரை வசூலித்து வெற்றிப் படமானது.
இதன் மூன்றாவது பாகத்தின் அறிவிப்பு ஆங்கிலப் புத்தாண்டு அன்று வெளியானது.
இந்நிலையில், இதன் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் பிரியா பவானி சங்கர் பேயாக இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.