தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு குறித்து...

News image

பேட்ரியாட் படத்தில் மம்மூட்டி - மோகன்லால். - படம்: யூடியூப் / ஆண்டனி ஜோசப் ஃபிலிம் கம்பெனி.

Updated On :3 ஜனவரி 2026, 12:45 pm IST

மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

ஆண்டனி ஜோசப் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 140 நாள்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது.

நடிகர் மம்மூட்டியின் கடைசி படமான களம்காவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படமும் வெற்றிப் படமானது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மோகன்லால் - மம்மூட்டி இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது, 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடித்துள்ளார்கள்.

மம்மூட்டியின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, குஞ்சக்கோ போபன், கிரேஸ் ஆண்டனி, இந்திரன்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்

இந்தாண்டு விஷு விழாவை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

The shooting of the film 'Patriot', starring Mammootty and Mohanlal, who are leading actors in Malayalam cinema, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.