தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு 100 ஓட்டு கூட கிடைக்காது: ரஜினி

நடிகர் ரஜினியின் பேச்சு வைரல்...

News image

நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின்

Updated On :4 ஜனவரி 2026, 4:57 pm IST

நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.

மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் தூய்மைக்கும் நேர்மைக்கும் பெயர் போனவர். சினிமா மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் எனக்கு நிறைய வழிகாட்டினார். ராகவேந்திரா மண்டபத்தைக் கட்ட அவர்தான் காரணம்.

அவர் தயாரித்த சிவாஜி திரைப்படம் அரசியல்வாதிகளுக்கு எதிரான படமாகவே திரைக்கு வந்தது. ஆனாலும், அப்படத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி பாராட்டினார். அந்தளவுக்கு அனைவரிடமும் நல்ல உறவில் இருந்தார்.

இன்றைய நிகழ்விலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் பணிகளுக்கு இடையே கலந்துகொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடிகளும் விலை மதிப்பானவை. இங்கு வந்ததால் அவருக்கு 100 ஓட்டு அதிகமாக கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் முதல்வர் கலந்துகொண்டது அவரின் உயரிய பண்பைக் குறிக்கிறது. இது, ஏவிஎம் சரவணன் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டு” எனக் கூறியுள்ளார்.

Summary

actor rajinikanth spokes about avm saravanan and mk stalin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.