

இயக்குநர் சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
அதில், நாங்கள் இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள்; இந்திக்கும் இந்தி பேசுபவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்பன போன்ற வசனங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
தில்லிதான் இந்தியாவா? செந்தமிழைக் காக்க பெரும் சேனை ஒன்று உண்டு, என்பன போன்ற வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம், 1964-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமாரின் 100வது படமாக இப்படம் உள்ளதால், டிரைலரின் பின்னணி இசையும் வலுவாக உள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அதர்வா உடனான இந்தி எதிர்ப்பு போராட்டம், இடையிடையே இந்தி பேசும் பெண் உடனான சிவகார்த்திகேயனின் காதல், ரவி மோகனின் வில்லத்தனம் என படத்தின் காட்சிகளும் வசனங்களும் ஈர்க்கும் வகையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.