உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளில் ஓ சுகுமாரி பட போஸ்டர்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்தின் போஸ்டர் குறித்து...

ஓ சுகுமாரி படத்தின் போஸ்டர். - படம்: இன்ஸ்டா / ஐஸ்வர்யா ராஜேஷ்.

Published On :

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ஓ சுகுமாரி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிறந்த நாளன்று வெளியாகியுள்ள இந்தப் போஸ்டரில் இந்தப் படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தார்.

அவரது ‘டிரைவர் ஜமுனா’, ஃபர்ஹானா, புலிமடா, தீராக் காதல் ஆகிய திரைப்படங்கள் அவருக்கென தனியான ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் இவர் நடித்துள்ள ஓ சுகுமாரி எனும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஓ சுகுமாரி எனும் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழி போஸ்டர்களிலும் வெளியாகியுள்ளது.

பரத் தர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது.

கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தீயவர் குலை நடுங்க திரைப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் இவர் அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The first look poster of actress Aishwarya Rajesh's film 'O Sukumari' has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.