நடிகை பார்வதி மரியான் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
பார்வதி திருவோத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கென தனி அடையாளத்தையே உருவாக்கிக்கொண்டவர்.
கதையம்சமுள்ள படங்களில் நடிப்பதுடன் அரசியல், இலக்கியம் ரீதியிலான உரையாடல்களில் பங்கேற்று தன் கருத்துகளை அழுத்தமாக முன்வைப்பவரும்கூட.
இவர் மலையாள சினிமாவில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு தொடர்ந்து குரல் எழுப்பியும் வருகிறார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பார்வதி, “மரியான் திரைப்பட படப்பிடிப்பின்போது முழுவதுமாக தண்ணீரில் நனைவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, உடை மாற்ற வேறு ஆடைகளையும் எடுத்து வரவில்லை. நான் ஹோட்டல் அறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறினேன். ஆனால், யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை.
பின், எனக்கு மாதவிடாய் நான் போக வேண்டும் எனக் கத்திச் சொன்னேன். படப்பிடிப்பில் என்னுடன் சேர்த்து 3 பெண்கள் மட்டுமே இருந்தனர். அந்தச் சூழலில் யாரும் ஆதரவாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
actor parvathy about maryan movie experiences
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!
இதுதான் புரமோஷனா? புலம்பும் தனுஷ் ரசிகர்கள்!
கர டிரைலர் அறிவிப்பு!

கர டிரைலர் எப்போது?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


