திரையரங்க உரிமையாளர்கள் குழு டிக்கெட் விலையை அதிகப்படுத்துவதற்கான கோரிக்கையை வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ள விஜய், திரைத்துறையில் மாற்றங்களைச் செய்வார் என அவரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்ட பிறகு, தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் ஆகியோர் மரியாதை நிமித்தமான அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்து திரைத்துறை சார்ந்த ஆலோசனைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று சென்னையைச் சேர்ந்த சில திரையரங்க உரிமையாளர்கள் அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்து, 24 மணி நேரமும் திரையரங்கங்கள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என்றும் சாதாரண திரையரங்குகளின் டிக்கெட் கட்டணங்களை ரூ. 190-லிருந்து ரூ. 300 ஆகவும் பிஎல்எக்ஸ், ஐமேக்ஸ் திரைகளுக்கு ரூ. 500 ஆக கட்டணங்களை அதிகரிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், திரையரங்குகளில் வெளியான பின்பு 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
A group of theater owners has submitted a request to increase ticket prices.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே பிரதமர் உயர்த்தியுள்ளார்: பியூஷ் கோயல்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!








