தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திரையரங்க டிக்கெட் விலையை ரூ. 300 ஆக உயர்த்தக் கோரிக்கை!

டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை...

News image

அமைச்சர் ராஜ்மோகனுடன் திரையரங்க உரிமையாளர்கள்

Updated On :19 மே 2026, 12:28 pm IST

திரையரங்க உரிமையாளர்கள் குழு டிக்கெட் விலையை அதிகப்படுத்துவதற்கான கோரிக்கையை வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ள விஜய், திரைத்துறையில் மாற்றங்களைச் செய்வார் என அவரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்ட பிறகு, தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் ஆகியோர் மரியாதை நிமித்தமான அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்து திரைத்துறை சார்ந்த ஆலோசனைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று சென்னையைச் சேர்ந்த சில திரையரங்க உரிமையாளர்கள் அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்து, 24 மணி நேரமும் திரையரங்கங்கள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என்றும் சாதாரண திரையரங்குகளின் டிக்கெட் கட்டணங்களை ரூ. 190-லிருந்து ரூ. 300 ஆகவும் பிஎல்எக்ஸ், ஐமேக்ஸ் திரைகளுக்கு ரூ. 500 ஆக கட்டணங்களை அதிகரிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், திரையரங்குகளில் வெளியான பின்பு 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

A group of theater owners has submitted a request to increase ticket prices.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.