லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் தி வாரியர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் மாஸ் ஹீரோவாக வேண்டுமென்றால் போலீஸாக நடித்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. நடிகர் விவேக் கூட ஒரு படத்தில் என் கடமை எம்ஜிஆர் எனத் துவங்கி ஆஞ்சநேயா அஜித் என ஒரு பெரிய பட்டியலை சொல்லுவார்.
தெலுங்கில் பிரபல நடிகரான ராம் பொத்தினேனி தமிழில் அறிமுகமான படத்திலேயே போலீஸாக களமிறங்கியிருக்கிறார். லிங்குசாமி இயக்கத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியிருக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
4 ஆண்டுகளில் இயக்குநர்களின் திரைமொழி மாறியிருக்கிறது, ரசிகர்களின் ரசனைகள் மாறியிருக்கிறது. ஆனால் பழைய கமர்ஷியல் படங்களின் பாதிப்பில் உருவாகியிருக்கிறது. இந்த ஒரு படத்தில் சாமி, சிங்கம், காக்க காக்க என பல போலீஸ் படங்களின் சாயல்.
படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் சில காட்சிகளை தமிழிலும் படமாக்கியிருக்கிறார்கள். இருப்பினும் மாற்று மொழி படம் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.
விசில் மகாலட்சுமி என்ற ஆர்ஜேவாக வரும் கதாநாயகி க்ரித்தி ஷெட்டி முதல் தலைமை மருத்துவராக வரும் ஜெயப்பிரகாஷ் என ஒருவரின் கதாப்பாத்திரம் கூட இயல்பாக இல்லை. அனைத்திலும் செயற்கைத்தனம்.
இதையும் படிக்க | சாய் பல்லவியின் 'கார்கி' : தமிழின் முக்கிய படம், ஏன்? - விமர்சனம்
ஒப்பீட்டளவில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஆதியின் கதாப்பாத்திரம் பரவாயில்லை. அவரின் நடிப்புதான் ஒரே ஆறுதல். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்களிலும் புதுமையில்லை.
ராம் பொத்தினேனியின் அம்மாவாக நடித்துள்ள நதியா, ஆதியிடம் ஒரு காட்சியில், 'பிறக்கும்போது என் மகன் அழவில்லை. எனக்கு தெரியும் அவன் அழ பிறக்கவில்லை' என்பது போல ஒரு வசனம் பேசுவார். அப்பொழுது முதல் பாதியில் நாயகன் ராமை ஆதி நடித்து துவம்சம் செய்யும் காட்சி கண்முன் வந்துபோனது. மொத்தத்தில் படம் பார்க்கும் அனைவரும் வாரியர்ஸ் தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நான் சோர்வாக இருக்கக் காரணம் இதுதான்: விஷ்ணு விஷால்

பராமரிப்புப் பணி: கோவை - சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து
வாடகைக்கு விடப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |



