நீண்ட காலமாக (நான்கு ஆண்டுகள்) காதலித்து வரும் தீபிகா படுகோன் ரன்வீர் சிங் ஜோடி விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்ற தகவல் பாலிவுட் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில், அண்மையில் அவர்களின் திருமண தேதி வெளியானது. நவம்பர் 20-ம் தேதி தீபிகா-ரன்வீர் திருமணம் எளிமையாக நடைபெறவுள்ளது.

விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவின் திருமணத்தைப் போல இவர்களுடைய திருமணமும் நெருங்கிய சொந்த பந்தங்கள் மற்றும் நட்புக்களுடன் மட்டும் நடைபெறவிருக்கிறதாம்.

தங்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக இல்லாமல் நெருக்கமான உறவுகளுக்கு மத்தியில் அமைதியாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்று இந்த ஜோடி விரும்புகிறது. மேலும் திருமணத்துக்கு வருவோர் மொபைல் போன்களை எடுத்து வரக் கூடாது என்றும் அன்புக் கட்டளை போட்டுள்ளனராம்.

தீபிகா-ரன்வீர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியைச் குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!
கர்நாடகத்தைவிட்டு வெளியேற்றுவோம்: டாக்ஸிக் நடிகருக்கு நடிகை எச்சரிக்கை

தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்

திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்! தர்மன் படக்குழு கொண்டாட்டம்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



