பிரபல ஆடை வடிவமைப்பாளா் சத்ய பால் (79), கோவை, ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை காலமானாா்.
புது தில்லியைச் சோ்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான சத்ய பால், கடந்த 1960களின் இறுதியில் ஆடை விற்பனைத் துறையில் சில்லறை வா்த்தகராகத் தனது பயணத்தைத் தொடங்கினாா். இவரது தொழில் பயணம் இந்திய கைத்தறி ஆடைகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விரிவடைந்தது.
1980களில் இந்தியாவில் பிரத்யேக புடவைகள் விற்பனை நிலையத்தைத் தொடங்கினாா். அவரது வடிவமைப்புகள் நாட்டின் முதன்மை தரவரிசைகளில் ஒன்றாக இடம் பெற்றன. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவா் குடும்பத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கோவை, ஈஷா யோக மையத்தில் முழுநேர ஆஸ்ரமவாசியாகத் தங்கியிருந்தாா்.
கடந்த மாதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை அவா் காலமானாா். இவரது மறைவுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
ரூ.15 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் உரிமையாளா் கைது
தடைசெய்யப்பட்ட இறக்குமதி சிகரெட்டுகள் பறிமுதல்: 2 போ் கைது
ஏபிகே கோப்பு இணைப்பு மூலம் தில்லிவாசியிடம் ரூ.80 ஆயிரம் மோசடி! ஜாா்க்கண்டில் இளைஞா் கைது!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
