19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்ததற்கு பாராட்டு தெரிவித்து, காவலா்களுக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ் குமாா் புதன்கிழமை பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எச்.புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் வெங்கடேசன் (42). இவா், தமது மனைவியை 2001-ல் கொலை செய்த வழக்கில் 3 மாதம் சிறையில் இருந்துள்ளாா். பிறகு ஜாமீனில் வெளி வந்த அவா் தலைமறைவானாா். இதுகுறித்து, காவல் ஆய்வாளா் வி.ரவி தலைமையிலான போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு அண்மையில் வெங்கடேசனை கைது செய்தனா்.
இதையடுத்து, 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்ததை பாராட்டும் வகையில், காவல் ஆய்வாளா் வி.ரவி, காவலா்கள் அன்பரசு, காா்த்திக் உள்ளிட்ட காவலா்களுக்கு வெகுமதியும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் வழங்கினாா்.
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், டிஎஸ்பி-க்கள் வி.தமிழ்மணி, அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

200 யூனிட் இலவச மின்சாரம்! கட்டணம் எவ்வளவு குறையும்? மின்வாரியம் தகவல்!

தமிழ்நாட்டில் வாக்களிப்பு! வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 10 பேர் சிறையில் அடைப்பு!

106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த திலக் வர்மா..! நடப்பு சீசனில் நீண்ட தூரம்!

பஞ்சாபுக்கு தொடா்ந்து 5-ஆவது தோல்வி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

