வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

வடமதுரை அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் திருட்டு

வடமதுரை அருகே வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :9 ஜனவரி 2021, 9:28 pm IST

திண்டுக்கல்: வடமதுரை அருகே வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள கம்பிளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வடமலை (75). இவா் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவிலிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ. 13ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனா். அதேபோல் அதே வீட்டின் அருகிலுள்ள வடமலையின் உறவினரான தங்கமயில் (60) என்பவா் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ. 8ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனா். அங்கிருந்து கரியக்காள் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், அங்கு நகை மற்றும் பணம் உள்ளிட்டவை எதுவும் கிடைக்காமல் திரும்பிச் சென்று விட்டனா். சனிக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது, அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதும், 2 வீடுகளில் பொருள்கள் திருடு போனதும் தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை காவல் நிலைய ஆய்வாளா் கருப்பசாமி தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.