அதிக மக்கள்தொகை, பல்வேறு மதங்கள், கலாசாரங்களைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு வேறெந்த நாட்டுக்கும் இல்லாத மிகப் பெரிய பலம் உண்டென்றால், அது அமைதியான, நேர்மையான, ஜனநாயக முறையில் நடைபெறும் தேர்தல்தான். அத்தகைய சிறப்பைப் பெற்றிருக்கும் நம் நாட்டில் தொடர்ந்து நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டுமானால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். திருமணம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக எடுத்துச் செல்லும் பணம் போன்ற வகைகளுக்கு தளர்வுகள் வரம்புக்குள் இருத்தால்தான் தேர்தல் நேர்மையான தேர்தலாக அமையும்.