அதைப்போல், ராபின் மில்லரும் அந்தப் பாதிரியாருக்கு ஒரு கடுமையான கடிதத்தை எழுதினார். தனது கணவரைப் பார்த்ததாகப் பாதிரியாரிடம் கூறிய அவரது உறவினர்கள், தான் 8 ஆண்டுகளாகப் பட்ட பாட்டை அறிய மாட்டார்கள் என்றும், அவர்களால் தன் கணவரின் தற்போதைய முகவரியை ஏன் அளிக்க முடியவில்லை என்றும், சின்னஞ்சிறு வயதில், தன் இரு பெண் குழந்தைகளைத் தவிக்கவிட்டுப் போன கணவன், தங்களுக்குப் பொருள்சேதத்துடன், ""தகப்பனில்லாக் குழந்தைகள்'' என்ற மனச்சேதத்தையும் விட்டுப் போனான் என்றும், அதன் காரணமாக அக்கணவர் உண்மையிலேயே உயிருடன் இருந்தாலும், அவர் தன்னையும், தன் குழந்தைகளையும் பொருத்தவரை இறந்தவர்தான் என்றும் அக்கடிதத்தில் ராபின் குறிப்பிட்டார். அதைப் படித்த பாதிரியார், அதோடு அப்பிரச்னையை முடித்துக் கொண்டார்.