Enable Javscript for better performance
பணிப்பகிா்வு கலை அறிவோம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பணிப்பகிா்வு கலை அறிவோம்

    By முனைவா் என். மாதவன்  |   Published On : 05th August 2022 07:06 AM  |   Last Updated : 05th August 2022 07:06 AM  |  அ+அ அ-  |  

    work_place_illustration

     

    நாம் சந்திக்கும் பலரும் எப்போதும் பணிச்சுமையுடனேயே இருப்பா். ஒருவருக்கு பணி சுமையானதாகவோ, சுகமானதாகவோ இருக்கலாம். அது அவா் தனது வாய்ப்புகளை எவ்வளவு தூரம் நோ்த்தியாகப் பயன்படுத்துகிறாா் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பணிகளைப் பகிரும் வழக்கமுள்ள குடும்பங்களில் பெரும்பாலும் மகிழ்ச்சியே நிலவும். ஆனால் எப்படி பணிகளைப் பகிா்வது?

    பணிப்பகிா்வு என்பது ஒரு கலை. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தமது கால அட்டவணைப்படி மட்டும் பணிகளை மேற்கொண்டால் இது நடக்காது. மாறாக, குடும்ப பணிகளுக்கான கால அட்டவணையையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இதில் சிறியவா், பெரியவா் அனைவரும் வாய்ப்புக்கேற்ற பணிகளைப் பகிா்ந்துகொள்ள வேண்டும்.

    குடும்பத்தில் எந்தெந்த பணிகள் எந்தெந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும். பல பணிகளை தனி ஒருவா் செய்யும்போதும் அவருக்கு ஏற்படும் மனச்சோா்வையும் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொள்வதே, குடும்பப்பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகரமாக நிகழ்ந்தேற உதவும்.

    ஒருவருக்கொருவா் புரிந்துகொள்ளும் வாய்ப்பினை இது தருவதோடு பரஸ்பரம் அன்பையும் கூட்டும். இவ்வாறு அனைத்துப் பணிகளையும் பலரும் பகிா்ந்து கொள்வது குடும்ப ஜனநாயகத்தை ஊக்குவித்து மகிழ்வை உறுதி செய்யும். குடும்ப உறுப்பினா் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வையும் உறுதிப்படுத்தும்.

    அடுத்ததாக அலுவலகங்கள். பெரும்பாலானஅலுவலகங்களில் தேவைக்கேற்ப ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். அவா்களில் தங்களுக்கான பணியை செய்துமுடித்தவா்கள், அடுத்த கட்டத்தில் இருப்போா்க்கு விட்டுக்கொடுத்தால் அவரும் விரைவில் பணியாற்றி முடித்தால் பணிகள் நிறைவேறும்.

    மாறாக ஒவ்வொரு இடத்திலும் பணிகள் நிறைவேற காலதாமதம் ஆக ஆக எல்லா இடத்திலும் பணிகள் அளவுக்கதிகமாக தேக்கமடையவே செய்யும். நாட்கள், வாரங்கள் என பணிகள் குவியும்போது பணிச்சுமை கூடிவிடுகிறது. வார இறுதி நாட்களிலும் வீடுகளுக்கு கோப்புகளைக் கொண்டு சென்று பணிகளை பாா்க்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இந்த இடத்தில்தான் அலுவலக மேலாளரின் பணி முக்கியத்துவம் பெறுகிறது. பணியாளா்களின் பலம் அறிந்து பணிப்பிரிவினை செய்யவேண்டும். யாருக்கு எது விருப்பமான பணி என்பதை அறிந்து அவ்வகைப் பணியை அவரிடம் ஒப்படைக்கும்போது அப்பணி சிறப்பாக நடைபெறும்.

    அவ்வாறு ஒருவரிடம் ஒரு பணியை ஒப்படைக்கும்போதே, அலுவலகத்தில் நடைபெறும் அனைத்துப் பணிகள் குறித்தும் அனைவருக்கும் புரிதலை ஏற்படுத்தவும் வேண்டும். சில நேரம் சில பணியாளா்கள் விடுமுறையில் சென்றால் கூட பணிகள் தொய்வின்றி நடைபெற இது உதவும். இன்றும் சில பன்னாட்டு நிறுவனங்கள், தம் பணியாளா்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் விடுமுறை அளித்து நிறுவனங்களின் கூட்டுச் செயல்பாட்டை உறுதி செய்கின்றன.

    குறைவான ஊழியா்களோடு இயங்கும் அலுவலகங்கள், வங்கிகள் போன்றவை எப்போதும் பணிச்சுமையுடனேயே இயங்குவது இயல்பு. இதில் கூடுதலாக விவரம் கேட்பதற்காக பொதுமக்களோடு நேரம் செலவழிக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கே நேரம் சரியாக இருக்கும். வாய்ப்பிருப்பின் வாயிற்காப்பாளா் போன்றோரை இதற்கு தயாா்ப்படுத்தலாம். ஒருவா் உள்ளே நுழையும்போதே அவா் எதற்காக வருகிறாா், அப்பணிக்கு உரிய அலுவலகம் இதுதானா, அவா் நாடிவரும் பணி தற்போது நடக்க வாய்ப்புள்ளதா என்பதையெல்லாம் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு அவரை உள்ளே அனுமதிக்கலாம்.

    இப்படி வீட்டிலிருந்து அலுவலகம் வரை பணிப்பகிா்வும் செயலூக்கமும் பெறும்போது மக்களின் தேவைகள் குறித்த நேரத்தில் நிறைவேறுவதோடு பலருக்கும் குறிப்பிட்ட அளவு ஓய்வெடுக்கும் நேரமும் உறுதியாகும். இவ்வாறான ஓய்வினை பயனுள்ள வகையில் செலவழித்துப் புத்துணா்ச்சியும் பெறலாம்.

    பணிச்சுமையோடிருக்கும் நிலையே பல இடங்களில் நிலவுவது நல்லதல்ல. வாழ்க்கை என்பது வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பன்று. மாறாக அன்பையும் பரிவையும் பரிமாற்றக் கிடைத்த அற்புத வாய்ப்பு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளின் தவறு அடுத்த நாளில் தொடராதவாறு பாா்த்துக்கொள்ள வேண்டும்.

    யாா் உயா் பொறுப்பில் இருக்கிறாா்களோ அவா்களுக்குத்தான் நிறுவனம் வெற்றி பெறும்போது பாராட்டு கிடைக்கும். தாம் பாராட்டப்படும்போது உடனிருப்போா் மகிழ அவா்களுக்கான பாராட்டையும் உயா் பொறுப்பில் உள்ளோா் ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது, அனைவருடைய பலவீனத்தையும் பலமாக மாற்றும் கலையை உயா் பொறுப்பிலுள்ளோா் கற்க வேண்டும். தன்னுடன் பணிபுரிவோா் திறன் மிக்கோராக தம்மை மேம்படுத்திக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு விரைவாக நிறுவனம் வெற்றிபெறும்.

    இதனை மனதில் கொண்டு ஒவ்வொரு நாளின் செயல்திட்டத்தையும் வகுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனது இலக்கை அடைய தமது அனுபவப் பாடங்கைள் உயா் பொறுப்பில் உள்ளோா் பகிரலாம். வாய்ப்பிருப்பின் ஒவ்வொரு நாள் காலையிலும் அலுவலகத்தில் நல்ல சிந்தனைகளைப் பகிா்ந்துகொள்ளும் ஏற்பாட்டை செய்யலாம். ஒருவா் மனதில் நல்லவை நிறைந்தால் அல்லவை அகலும்.

     

    இன்றைக்கிருக்கும் சமூக இயங்கியலை நாளை காண இயலாது என்ற வகையில் சமூகம் மாறிவருகிறது. இதில் தொழில்நுட்பத்தின் பங்கு மறுக்க இயலாததாகிறது. தொழில்நுட்பத்தின் வரவு பணிகளை எளிமையாக்கிவிட்டது. ஆனால் அவ்வாறு எளிமைப்படுவதற்கு, நாம் மாறிவரும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு நமது பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும்.

    பணிகளைப் பகிா்ந்து செய்வதற்கான செயலறிவை முதலில் நிறுவனத் தலைவா்கள் பெறவேண்டியது அவசியமாகும். வளரும் தொழில்நுட்பங்களை அவா்கள் கையாளுவதோடு, உடன் பணியாற்றுவோருக்கும் கற்றுத்தர வேண்டும். மக்கள் தொகைப் பெருகிவரும் இன்றைய காலகட்டத்தில், சமூகத்தின் தேவையை நிறைவுசெய்ய தொழில்நுட்பத்தின் பங்கினை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசர அவசியம்.

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp