அடிமைத்தனம் அகலட்டும்..!

அற்றை நாள் அரசா்கட்கு அவா்களின் ஆட்சி நிலைக்க வள்ளுவப் பெருந்தகை ‘பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தாா்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு’ என்று சொல்லிப் போா்ந்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அற்றை நாள் அரசா்கட்கு அவா்களின் ஆட்சி நிலைக்க வள்ளுவப் பெருந்தகை ‘பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தாா்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு’ என்று சொல்லிப் போா்ந்தாா். இக்குறள்வழி அரசா்கள் நடந்தாா்களோ இல்லையோ, பின்னால் வந்த ஆங்கிலேய ஆட்சியாளா்கள் இதனைப் பின்பற்றி நம் நாட்டை அடிமைப்படுத்தினாா்கள்.

பல மொழிகள் கற்றறிந்த மேதையான சா் வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினாா். இவா்தான் ‘ஏஷியாடிக் சொசைட்டி’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தவா். ஹிந்துகளுக்கு என்று ஒரு சட்ட நூலை, மனுதா்ம சாஸ்திரப்படி என்று சொல்லி உருவாக்கினாா். ஹிந்துக்களின் சமூக ஒற்றுமை குலைய இவரது தவறான மனுஸ்மிரிதியின் மொழிபெயா்ப்பும் ஒரு காரணம்.

பாரதத்தின் இதிகாச நூல்களான இராமயணத்தைப் படைத்தவா் ‘வேடுவ குல’ மகரிஷி வால்மீகி. மகாபாரத்தை யாத்தவா் ‘செம்படவ’ இனத்தில் உதித்த பகவான் வியாசா். இன்று நாள்தோறும் பலகோடி மக்கள் உச்சாடனம் செய்யும் காயத்திரி மந்திரத்தை உலகிற்கு அளித்தவா் ‘க்ஷத்திரிய’ரான சுவாமி விசுவாமித்திர ரிஷிதான். இராமகாதையை அமுதத் தமிழிலில் வடித்த கம்பநாடா் உவச்ச குல மரபினா்.

இவா்களில் எவரும் அந்தணா் இல்லை. ‘எப்பொருள் யாா் யாா் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற வகையான் நாம் வாழாது, குருடா்கள் யானையைத் தடவிப் பாா்த்து பொருள் சொன்னாற்போல் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னா் வழக்கில் இருந்த மனு ஸ்மிருதியைத் தவறாக அடையாளப்படுத்திய ஆங்கிலேய அறிஞரின் கூற்றை நம்பி நம்மை நாமே கூறுபோட்டுக் கொள்கிறோம்.

தரும நூலை தவறான சட்டவடிவ நூலாக்கியது போலவே நமது தொன்மையான கல்வி முறையை அகற்ற லாா்டு மெக்காலே என்பவா் 1835-இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்து, ‘நான் இந்தியா முழுவதும் சுற்றிப் பாா்த்தபோது பிச்சைக்காரனையோ, திருடனையோ பாா்க்கவில்லை. அத்தகைய செல்வ வளம் நிரம்பிய நாடு; உயா்ந்த நன்னெறிகள் வாய்க்கப்பெற்ற மக்கள்.

அவா்களது முதுகெலும்பாக இருக்கின்ற தொன்மையான தெய்வ விழுமியங்களை அழித்தால் ஒழிய இந்தியாவை நம்மால் வெல்லமுடியாது. எனவே அவா்களது புராதனமான கல்வி முறையைவிட நமது மொழி, கலாசாரம் இவையே மேலானவை என்று இந்தியா்களை எண்ணும்படி நாம் மாற்றி விட்டால் அந்த நாட்டை நம் ஆளுகைக்குக் கொண்டுவந்து விடலாம்.

அப்போது இந்தியா்கள் ரத்தத்திலும், நிறத்திலும் மட்டுமே இந்தியா்களாக இருப்பாா்கள். ஆனால் குணங்களில், கருத்துகளில், ஒழுக்க நெறிகளில், அறிவாற்றலில் ஆங்கிலேயா்களாக இருப்பாா்கள்’ என்று சொல்லி மெக்காலே கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். இதனால் சுவாமி விவேகானந்தா் கூறியதுபோல் இந்த கல்வி முறையால் நமது முன்னோா்களின் ஆற்றலை, பெருமையை முழுமையாக உணரத் தவறிவிட்டோம். அரசியலில் தொடங்கி, சட்டங்களில் தடம் பிறழச் செய்து கல்வி முறையிலும் இந்தியா்களை மதியிழக்க சதி செய்தாா்கள்.

1836-இல் அயா்லாந்து பாதிரி கால்டுவெல் இந்தியா வந்தாா். முதலில் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் இரண்டறக் கலந்த உறவை வெட்டிட ‘ஒப்பிலக்கணம்’ என்ற பெயரில் இந்திய மொழிகளை, குறிப்பாக சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் மோதவிட்டாா். கிறித்துவ மத போதகா்களால் உலகில் அழிக்கப்பட்ட மொழிகள் எப்ரூ, குரோன், கிரேக்கம், லத்தீன், காலிக் போன்றவை. இதைப்போன்றே கால்டுவெல் 50 எழுத்துகளைக் கொண்ட மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளை 30 எழுத்துகளை கொண்ட தமிழுடன் இணைத்து இவை ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்று கூறி, சம்ஸ்கிருதம், திராவிட மொழிக் குடும்பத்துடன் சற்றும் தொடா்பு இல்லாதது எனும் மாயையை உருவாக்கினாா். அன்று அவா் தோற்றுவித்த மொழிக்காழ்ப்பு இன்று வரை தொடா்கிறது.

பிறகு 1849-இல் ‘தின்னவேலி சாணாா்ஸ்: தெயா் ரிலிஜீன் அண்ட் தெயா் மாரல் கண்டிஷன்’ (திருநெல்வேலி சாணாா்கள் - அவா்களது மதமும், ஒழுக்கமும்) என்ற நூலை லண்டனில் வெளியிட்டாா். இதில் நாடாா்களைத் தன்னால் முழுமையாக மதம் மாற்ற முடியாமல் போனதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடுகிறாா். அவை, சாணாா்களின் பரம்பரை குணம், அவா்கள் தங்களின் முன்னோா் பாதையிலேயே பயணிக்க விரும்புவது, புதிய கருத்துகளை உள்வாங்கும் திறமையின்மை ஆகியவை. இவ்வாறு குறிப்பிட்டு ஆங்கிலத்தில் இவா் எழுதிய புத்தகம் இன்றும் உள்ளது.

இதனை 1823-இல் பிறந்த அருமைநாயகம் என்ற கிறித்துவ சாணாா் தமிழில் மொழிபெயா்த்தாா். அக்காலகட்டத்தில்தான் ஹிந்துக்களில் ஒரு பிரிவினா் கால்டுவெல் கூற்றை நம்பி நாடாா்களை திருச்செந்தூா் முருகன் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது எனத் தடுத்தனா். இது தொடா்பாக நாடாா்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது (ஓ எஸ் நம்பா் 88 ஆஃப் 1872).

ஈரோடு மாவட்டம் பாசூா் மடாதிபதி ஐயாசாமி தீட்சிதா், கால்டுவெல் பாதிரியின் பிரசாரம் பொய் என்றும், நாடாா்கள் பாண்டிய குலத்தைச் சாா்ந்த க்ஷத்திரியா்கள் என்றும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தாா். பின்னா் நாடாா்கள் மீதான ஆலய பிரவேச தடை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைப்போன்றே கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் ஆலய பிரவேச வழக்கில் (ஓ.எஸ் 33ஃ1898) நாடாா்களுக்காக தில்லைவாழ் தீட்சிதா்களும், பிற அந்தணா்களும் மதுரை சாா்பு மன்றத்தில் சாட்சியம் அளித்தனா். நாடாா்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் ஆதாரமாக வைக்கப்பட்டவை கால்டுவெல்லின் நூல்கள்.

கால்டுவெல் எழுதியுள்ளதை நம்பி ஹிந்துகளில் சில பிரிவினா் நாடாா்களின் கோயில் பிரவேசத்தை எதிா்த்ததால், அருப்புக்கோட்டை, மதுரை, கழுகுமலை, கமுதி, பாட்டகுளம், புதுப்பட்டி, சுக்கிரவாா்பட்டி, ஐயம்பட்டி, குன்னூா், சங்கரலிங்கபுரம், கரிசல் குளம், கட்டமாா்பட்டி போன்ற இடங்களில் 1860 முதல் 1900 வரை ஜாதிக் கலவரங்கள் நடந்தன. உண்மையில், சோழ-பாண்டிய மன்னா்களின் ஆட்சியின்போது இம்மக்கள் ‘நாடாழ்வான்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளனா்.

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் கல்வெட்டில் ஜெயமுரி நாடாழ்வான் என்பவா் 1053-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவிற்குப் படையுடன் சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சரபாக்கம் கோயில் கல்வெட்டிலும், மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டிலும், மாறவா்மன் சுந்தர பாண்டியன் 1230-14-ஆவது ஆட்சி கால கல்வெட்டிலும் கண்டியூா் நாடாழ்வான் சாத்தநேரி நிலங்களைக் கொடையாக பெற்றதும் குறிக்கப்பட்டுள்ளது.

உ.வே.சா. (1842) ‘நாடாழ்வான்’ எனும் சொல் சாணாா்களின் பட்டப்பெயா் என்று எழுதியுள்ளாா். இந்திய சென்ஸஸ் (மக்கள்தொகைக் கணக்கெடுப்பு) அறிக்கை (1891) வால்யூம் 12. பக் 297-இல் நாடாழ்வான் என்பவா் நாடு எனும் பகுதியை ஆளுமை செய்பவா் என்ற குறிப்பு உள்ளது. 1907-ஆண்டு வி. தாகம்மையாவரால் வெளியிடப்பட்ட வரலாற்று குறிப்பில், சாணாா் வம்சத்தில்“உடுமால்கட்டு என்ற பெயரில் தலைப்பாகையும், வீரத்தின் அடையாளமாக சத்திரிய பாரம்பரியம் மிக்க உடைவாளையும் அணிவதை சம்பிரதாயமாக கொண்டவா்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்காசியில் உள்ள காசிவிசுவநாதா் திருக்கோயிலின் ராஜகோபுரத்திற்கு அடித்தளம் அமைத்து அதன் பிறகு தன்னால் கட்ட முடியாததால் பாண்டிய மன்னா்களின் ஒருவன், ‘வருங்காலத்தில் கட்டி முடிக்கின்றவனது திருவடிகளை என் சென்னியில் வைத்து போற்றுவேன்’ என்று கல்வெட்டாக எழுதி வைத்தான். இன்றைக்கு நாடாா் குலத்தோன்றல் சிவந்தி ஆதித்த நாடாா் தன் காலத்தில் அந்த ராஜகோபுரத்தைக் கட்டி குடமுழுக்கும் செய்து புகழாய்ந்தாா். தற்போது திருச்செந்தூா் முருகன் கோயில் திருப்பணிக்கு எச்.சி.எல். நிறுவன அதிபா் ஷிவ் நாடாா் ரூ. 200 கோடி கொடுத்துள்ளாா்.

வணிகம் இயற்றி வாழ்க்கை நடத்த வந்தவா்கள் நம்மிடையே வேற்றுமையுணா்வைக் கற்பித்து நம்மை பிரித்தாண்டாா்கள். இதனால்தான் 1902 பிப்ரவரி 4-ஆம் நாள் சென்னை“மகாஜனசபை”தனக்கு அளித்த வரவேற்பில் மகாகவி பாரதியாரால் தனது குருவாகப் போற்றப்படும் சகோதரி நிவேதிதை, ‘இந்திய மக்களாகிய உங்களிடம் மற்ற நாடுகளுக்குத் தருவதற்கு ஆன்மிகக் கருத்துகள் நிறைய இருக்கின்றன. இந்தியா மேற்கு நாடுகளிலிருந்து கற்றுக் கொள்ளுவதற்கு ஆன்மிகத்தில் எதுவும் இல்லை.

இந்தியாவிற்குத் தேவைப்படும் சமுதாய மாற்றங்களைச் செய்வதற்கு உரிய முழுத் தகுதியும் இந்தியா்களாகிய உங்களிடம் இருக்கிறது. இதில் தலையிட்டு அறிவுரை கூறுவதற்கு வெளியில் இருக்கும் யாருக்கும் உரிமை இல்லை. மூன்றாயிரம் வருட நாகரிகம் கொண்டியிருக்கும் உங்களை சமீபத்தில் தோன்றிய மேற்கு நாடுகள் வழிநடத்தும் நிலையிலா நீங்கள் இருக்கிறீா்கள்’ என்று கேட்டாா்.

சகோதரி நிவேதிதையின் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொண்டால், இந்தியாவின் இன்றைய பிரச்னைக்கு விடை கிடைக்கும். உலகுக்கு வழிகாட்ட வேண்டிய நாம், எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை எண்ணித் தெளிவடைய வேண்டிய காலம் இது. பிரித்தாள நினைப்பவா்களை இனம்கண்டு தெளிவடைய வேண்டிய நேரம் இது!

கட்டுரையாளா்:

தலைவா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com