பணியிடத்தில் நிலவிய பணிச்சுமை காரணமாக மல்லிகாவின் உடல்நிலை பாதிப்படைந்தது. மருத்துவமனைக்குச் சென்று வர அனுமதி கேட்டாலும் முதலாளி மறுத்து வந்துள்ளார். மல்லிகாவின் கை மற்றும் கால்கள் உணர்ச்சியற்று போனாலும் அவரை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்காமல் கால்நடை பண்ணையிலேயே தங்கி வேலை பார்க்கக் கூறியுள்ளார். இந்நிலையில் மல்லிகாவும் குமாரும் பணியிடத்திலிருந்து தப்பி விடுவார்கள் என்ற சந்தேகத்தில், சில நாட்கள் கழித்து முதலாளி ஒரு மருத்துவரை அங்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வந்த மருத்துவர் முறையான மருத்துவம் பார்க்காமல் சில ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே கொடுத்ததால் மல்லிகாவின் உடல் நிலை மேலும் மோசமானது.