மழைக்காலத்தில் ஏற்படும் முக்கிய பிரச்னை மின்சார விபத்துகள்தான். அதனால்தான் மழை அதிகம் இருக்கும் போது சில பகுதிகளில் மின்சாரத்தை நிறுத்தி வைத்து விடுவார்கள். மின் விபத்துக்களில் இருந்து காத்துக் கொள்ள, முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு மக்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை வடக்கு மின் ஆய்வாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின்சார ஒயரிங் வேலைகளை, அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் வழியாக மேற்கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற, தரமான மின் சாதனங்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும். மின் விளக்குகளை பொருத்துவதற்கும், எடுப்பதற்கும் முன், ஸ்விட்சுகளை அணைக்க வேண்டும். 'பிரிஜ், கிரைண்டர்' உள்ளிட்ட வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய, மூன்று சாக்கெட் உள்ள, பிளக்குகள் வழியாக மட்டுமே, மின் இணைப்பு வழங்க வேண்டும்.ஆய்வு அவசியம் உடைந்த ஸ்விட்ச், பிளக்குகளை, உடனே மாற்ற வேண்டும். பழுதுபட்ட மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். 'கேபிள் டிவி' ஒயர்களை, மின் வினியோக மேல்நிலை கம்பிகளுக்கு அருகில், எடுத்துச் செல்ல வேண்டாம். ஒவ்வொரு வீட்டிலும், நில இணைப்பு கம்பிகள் கொடுப்பதுடன், அவற்றை, விலங்குகள், குழந்தைகள் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, மின் ஒயர்களை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் ஒயர்களை மாற்ற வேண்டும்.
மின் கம்பத்துக்காக போடப்பட்ட, 'ஸ்டே' ஒயரின் மீது, கயிறு கட்டி துணி காய வைக்கும் சம்பவங்களை தடுக்க வேண்டும். விளம்பர பலகைகள் குளியலறை, கழிப்பறை போன்ற ஈரமான இடங்களில், ஸ்விட்சுகள் வைக்க கூடாது. சுவரின் உள்பகுதியில், மின்சாரம் எடுத்துச் செல்லும், பி.வி.சி., குழாய்கள் இருந்தால், அப்பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.மின் கம்பங்களை பந்தல்களாக மாற்றக் கூடாது. அவற்றின் மீது விளம்பர பலகைகள் கட்டக் கூடாது. மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம். எச்சரிக்கைமழையாலும், காற்றாலும், அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பிகளின் அருகில் செல்ல வேண்டாம். மின் வாரிய அலுவலகத்துக்கு, உடனே தகவல் அளிக்க வேண்டும்.
மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில், கட்டடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். விபரங்களுக்கு, மின் வாரியம் மற்றும் மின் ஆய்வு துறை அலுவலர்களை அணுகவும். பாதுகாப்புஇடி, மின்னலின் போது, திறந்த
வெளியில் நிற்க வேண்டாம். கான்கிரீட் கட்டடம், பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில், தஞ்சமடைய வேண்டும். குடிசை வீடு, பஸ் நிறுத்த நிழற்குடை, மரத்தடியில் நிற்க வேண்டாம். இடி, மின்னலின் போது, மிக்சி, கிரைண்டர், கணினி, 'டிவி' மற்றும் போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். கட்டடங்களில் திறந்த நிலை பகுதி, ஜன்னல், வாயிற்கதவு அருகில் நிற்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மின்வாரியம் வெளியிட்டுள்ள ஒரு 'ஆடியோ'வில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டவை: